தருமபுரி, மே 6- தருமபுரி மாவட்டம் முழுவதும் 21,028 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரி வித்துள்ளார். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட் டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தருமபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், ஒரு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள், ஒரு சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத் தம் 179 பள்ளிகளைச் சேர்ந்த 20,347 மாணவ, மாணவிகள், 681 தனித்தேர்வர்கள் என மொத்தம் 21,028 பேர் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். இத் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலு வலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணி களையும் முழுமையாக மேற்கொள்வ தோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண் ணம் பணியாற்ற வேண்டும், என்றார்.