districts

img

பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஆபத்தான பரிசல் பயணம்!

தருமபுரி, நவ.27- நாகமரை பரிசல் துறையிலி ருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்ல, பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்க வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தை அடுத்த ஏரியூர் அருகே உள்ள நாகமரை பரிசல் துறையில்  இருந்து அக்கரைக்கு செல்ல சுமார்  3 கிலோ மீட்டர் தொலைவிற்கு பரி சல் இயக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை டென்டர் விடுவது வழக்கம்.

தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், மூன்று ஆண்டுகள் தருமபுரி மாவட்டத்திற்கும், மூன்று ஆண்டு கள் சேலம் மாவட்டத்திற்கும் பிரித்து, டென்டர் விடப்பட்டு வரு கிறது. இரண்டு மாவட்டங்களை யும் இணைக்கக்கூடிய இந்த பரிசல்  பயணமானது, நாகமரை மற்றும் ஏரி யூர், நெருப்பூர், பென்னாகரம் பகு தியை சுற்றியுள்ள பல கிராமங்க ளில் இருந்து பள்ளி, கல்லூரி மாண வர்களும், அன்றாட பணிக்காக செல்பவர்கள் மற்றும் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தவும், காவிரி ஆற்றைக் கடந்து தங்கள் இருசக்கர வாகனங்களையும் பரிச லில் ஏற்றி பயணித்து வருகின்றனர்.  

மேலும், சேலம், மேட்டூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட் டங்களுக்கு விவசாயிகள் விவசா யப் பொருட்களை எடுத்து செல் கின்றனர். இதேபோல் அப்பகு திக்கு சென்று வேலை செய்துவிட்டு  மீண்டும் மாலை நேரங்களில் பரிசல்  மூலமாகவே தங்களது கிராமத் திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பேருந்தில் பய ணம் செய்தால் சுமார் 70 கிலோமீட் டர் சுற்றி வரவேண்டிய நிலை உள்ள தால், பொதுமக்கள் காவிரி ஆற்றில்  குறுகிய நேரத்தில் பரிசல் பயணம் மூலம் கடந்து செல்கின்றனர்.

மூன்று கிலோமீட்டர் தூரத் திற்கு ஒரு நபருக்கு 10 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 20  ரூபாயும் அரசு நிர்ணயம் செய்துள் ளது. ஆனால், அரசு அறிவித்த தொகையைவிட இரண்டு மடங்கு  உயர்த்தி வசூல் செய்வதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, இந்த பரிசல் துறை ஏலத்தை ரத்து செய்து, அர சாங்கமே இந்த பரிசல் துறையை நடத்த வேண்டும். மேலும், மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதியான காவிரி ஆற்றில் பரிசல் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் எது வும் இல்லாமல் அழைத்துச் செல்வ தாகவும், அதிகாரிகள் யாரேனும்  வந்தால் மட்டுமே பாதுகாப்பு உப கரணங்கள் வழங்குவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். எனவே, மக்களுக்கு பாதுகாப் பான பரிசல் பயணத்தை உறுதிப் படுத்த வேண்டும். உயர்மட்ட பாலம்  கட்டப்படும் என தமிழக அரசு அறி வித்திருந்த நிலையில், அதற்கான  பணிகளை முன்னெடுக்க வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.