districts

img

இலவச மனைப்பட்டா கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஜமாபந்தியில் மனு

தருமபுரி, ஜூன் 16- கிளானூர் கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கு மனைப்பட்டா கேட்டு அரூரில் நடைபெற்ற ஜமா பந்தியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப் பட்டது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம்  செல்லம்பட்டி ஊராட்சி கிளானூரில் சுமார் நூற்றுக்கும் மேற் பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இவர் களுடைய வாழ்வாதாரமே நூறுநாள் வேலையும், தினக் கூலியையும் மட்டும் நம்பியே மே உள்ளது. இவர்களில் பலருக்கு சொந்தவீடு இல்லை. சிலர் ஒரே  வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வருகின்ற னர். இவர்களுக்கு மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு  கொடுக்கப்பட்டது. ஆனால், இலவசமனைபட்டா கிடைக்க வில்லை. எனவே, இலவச மனைப்பட்டா கிடைக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கையில், அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் ஈ.கே.முருகன், ஒன் றிய செயலாளர் எம்.தங்கராஜி, ஜடையாண்டி தமிழரசன், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.