தஞ்சாவூர், ஜூன் 16- குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில், இந்திய தொழி லாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கிய தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆதனூரைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய் (27) உயிரிழந்தார். இவருடைய உடல் குவைத் நாட்டில் இருந்து வெள்ளிக் கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் உயிரி ழந்த வாலிபர் புனாஃப் ரிச்சர்டு ராய் இல்லத்திற்கு சென்று, அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் புனாஃப் ரிச்சர்ட் ராயின் பெற்றோர், “தாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், தங்களது இளைய மகன் ரூசோவுக்கு (25) அரசு வேலை பெற்றுத் தர வேண்டும். குவைத் நாட்டில் தங்கள் மகன் பணியாற்றிய நிறுவனத்தி டம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரி மனு அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளு மன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களிடம் உறுதியளித்தனர்.