districts

img

தஞ்சாவூரில் உலக செவிலியர் தின விழா

தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை யில் வியாழனன்று உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு செவிலியர் கண்காணிப்பாளர் எஸ்.கலைமணி தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு செவி லியர்கள் சங்க மாநில பொ துச் செயலாளர் கே.வளர் மதி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.சித்ரா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, நைட் டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி, செவிலியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செருவாவிடுதி
தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதி தரம் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணி யாற்றும் செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர் கள், கிராம சுகாதார செவிலி யர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் 16 பேருக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலை மையில் மலர்தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், செவிலியர்களுக்கு கைத் தறி ஆடை அணிவிக்கப் பட்டது.  நிகழ்ச்சியில், மருத்து வர்கள் எம்.பாரதி, ஏ.பொன்மணி மேகலா, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் எஸ்.சந்திர சேகரன், உதவியாளர் வசந்தா ராணி மற்றும் செவி லியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

;