தஞ்சாவூர், ஜூன் 21- உலக இசை தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண் பாட்டு மையத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடை பெற்றன. இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில், தென்னக பண்பாட்டு மையத்தில், உலக இசை தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கிரா மிய கலைநிகழ்ச்சிகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சி கள் நடைபெற்றன. முன்னதாக 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விரு நிகழ்ச்சிக்கும் வந்தவர்களை தென்னக பண்பாட்டு மையத்தின் அலுவ லர் ராஜகோபால் வரவேற்றார். மையத் தின் இயக்குநர் (பொ) முனைவர் தீபக் கிர்வாட்கர் தலைமை வகித்தார். வல்லம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மையத்தின் அலுவலர் மீனாட்சி நாதபிள்ளை நன்றி தெரிவித்தார்.