தஞ்சாவூர், ஏப்.25 - ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், தஞ்சா வூர் கோட்டப் பேரவை ஞாயி றன்று தஞ்சை சிஐடியு அலு வலகத்தில் கோட்டத் தலை வர் சந்தனமுத்து தலைமை யில் நடைபெற்றது. கலைச் செல்வன் வரவேற்றுப் பேசி னார். வட்டச் செயலாளர் காணிக்கைராஜ் பேர வையை துவக்கி வைத்து உரையாற்றினார். கோட்டச் செயலாளர் ரமேஷ் வேலை அறிக்கை வாசித்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜூ, வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ், துணைச் செயலாளர் சங்கர், மின்வா ரிய ஓய்வு பெற்றோர் சங்கம் அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறை வாக மாநில துணைதலைவர் எஸ்.ராஜாராமன் சிறப்புரை யாற்றினார். பேரவையில் கோட்ட தலைவராக கலைச்செல் வன், கோட்டச் செயலாள ராக அறிவழகன், துணைத் தலைவராக ரமேஷ், துணைச் செயலாளராக சந்தனமுத்து மற்றும் பிரிவு பிரதிநிதிகள் தேர்வு செய்யப் பட்டனர். மின் ஊழியர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண் டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் களை பாதிக்கும் பி.பி.எண். 2-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.