districts

நீர்வழிப் பாதைக்கு இடையூறு இல்லாமல் பாலப் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.22 - தஞ்சையில் கோட்டாட் சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார், வரு வாய் கோட்டாட்சியர் ரஞ்சித் திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  “தஞ்சாவூர் மாநக ராட்சியின் முக்கியமான குளங்கள், அகழிகளுக்கு நீர்  வழிப் பாதையாக உள்ள ராணி வாய்க்கால் மழைநீர் வடிகாலாக, கல்லணை கால்வாய் (புது ஆறு) கடக்கும் போது, ஆற்றுக்கு கீழ் கல்லணை கால்வாய் நீர்  கலக்காத வகையில், வலது  புறத்திலிருந்து இடது புறமாக  செல்லும். சில பெரு  நிறுவனங்கள் ராணி வாய்க்காலை ஆக்கிர மித்துள்ள நிலையில், தற் போது கல்லணை கால்வாய் ஆற்றுப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.  அதில் நடைபெறும் பணி களில் ஆற்றுக்கு கீழ் நீர்  செல்லும் பாதை அழிக்கப் பட்டு ஆற்றுப் பாலம் கட்டப் பட்டு வருகிறது. இதனால் மழைநீர் வடிகால் புது ஆற்றில் கலப்பது, அகழி கள் குளங்களுக்கு நீர் செல்லும் வழியும் அடை படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, பழைய நீர்வழிப் பாதையில் எவ்வித பாதிப்பும் இல்லாமல், கல்ல ணைக் கால்வாய் ஆற்றுப்பா லம் பணிகளை மேற்கொள்ள  வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.