தஞ்சாவூர், ஜூலை 11 - இந்தியாவிலேயே தமிழ்நாடு வளரும் மாநிலமாகத் திகழ்கிறது என்றும் தேசிய அளவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டினர் என்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் புதன்கிழமை நடை பெற்ற தனியார் வணிக வளாகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரி வித்தது:
தமிழக முதல்வரின் ஆட்சியில் தொழில் துறையில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சி கண்டு வரு கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மிகப் பிரம்மாண்டமான வளரும் மற்றும் முற்போக்கான மாநிலமாக இருக்கிறது. இதை பெரிய நிறுவனங் களின் உயர் அலுவலர்களும் பெருமையாகக் கூறி, முதலீடு செய்ய முன் வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தேர்வு செய்யும் பணியாளர்களில் 50 சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும் எனக் கூறு கின்றனர். அந்த நிலை மற்ற மாநிலங் களை விட தமிழ்நாட்டில்தான் உள்ளது. இந்திய அளவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
தொழிற்பேட்டை
தஞ்சாவூர் அருகே அமைக்கப்பட வுள்ள சிப்காட் தொழிற்பேட்டை அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும். இதில், நிறைய நிறுவனங்கள் தொழில்கள் தொடங்க ஆர்வம் காட்டுவதால், பணிகள் விரைவாக தொடங்கப்படவுள்ளன.
தஞ்சாவூரில் தொழில் வளர்ச்சி அடையும்போது, இங்கு சமூக உள்கட்ட மைப்புகள் மிகவும் அவசியமாக இருக்கிறது. இங்கு வரக்கூடிய பெரிய நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மால், பொழுதுபோக்கு அம்சங்கள், சாலை இணைப்புகள் உள்ளிட்டவை சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதுபோன்ற வளர்ச்சியைப் பார்த்து நிறைய பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் தொழில் தொடங்க முன் வருகின்றனர். இதன் மூலம் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.