தஞ்சாவூர், ஜூன் 27 - தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது: அக்னி பாதை திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். தேசத்தின் பாதுகாப் பில், ராணுவத்தில் சமரசம் செய்கிற ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பதை ஏற்க முடியாது. ராணுவ ஆள்சேர்ப்பு முறையி லேயே இத்திட்டம் ஓர் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு தமது சிந்தாந்த அடிப்படையில், ராணுவ கட்ட மைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியே இது. தாய்நாட்டுக்காக தன்னு டைய உயிரையே கொடுப்பதற்கு சித்தமாக வேண்டிய மனநிலை, ராணுவ வீரர்களுக்கு உருவாக வேண்டும் என்றால், அவர்களுக்கு பிறகு அவர்களுடைய குடும்பத்தை பாதுகாப் பதற்கு ஓய்வூதியம், வேலையில் இருக்கும் போது முறையான ஊதியம், பதவி உயர்வு தேவைப்படுகிறது. அக்னி பாதை திட்டத்தில் நான்கு வருடம் வேலை செய்தால் சம்பளம் மட்டும்தான் கிடைக்கும். பென்சன் கிடையாது, பணி உயர்வு கிடையாது. ஒன் ரேங்க், ஒன் பென்சன் என்பதற்கு பதிலாக, ‘நோ ரேங்க்... நோ பென்சன்’ என்ற இடத்திற்கு வந்து விட்டார் கள். கடுமையான வேலையின்மை பிரச்சனை தேசத்தில் தலைவிரித்தாடுகிறது. ராணுவத் தில் தான் நிரந்தரமான வேலை கிடைக்கும் என்ற நிலையில், இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆயுதப் பயிற்சி ள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளும் பெற்று, நான்கு வருடங்களுக்கு பிறகு பணி முடிந்து வீதிக்கு வரக்கூடிய இளைஞர்கள், அடுத்து எந்த வேலை என்று பார்க்கும்போது, ஆயுதம் தாங்கிய சமூக விரோத கும்பல் தங்கள் பக்கம் ஈர்க்கும் ஆபத்தான நிலை உள்ளது.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட்டுகள் இந்த திட்டத்தை பெரிய அளவில் வரவேற் கிறார்கள். குறிப்பாக டாட்டா, கோயங்கா, மஹிந்திரா போன்ற பல நிறுவனங்கள் வர வேற்றுள்ளன. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை தனியார் மயமாக்குவது என ஒன்றிய அரசு முடிவு செய்த பிறகு, அந்த துறையில் கால் பதிக்க இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருக் கின்றன. தனியார் கார்ப்பரேட் முதலாளி கையில் தளவாட உற்பத்தி போனால், நான்கு வருடம் பணி முடிந்து வரும் அக்னி வீரர்களை மலிவு உழைப்பாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதிருப்தியும், கோபமும் உள்ள இளைஞர்களை பஜ்ரங் தள் போன்ற குண்டர் படையில் சேர்க்க வைப்பதற்கான முயற்சி யும் வரும். இப்படி, ஒரே கல்லில் பல மாங்காய் களை அடிக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. ராணுவத்தில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்கள் எல்லாமே ஒப்பந்த பணியிடங் களாக மாற்றப்பட்டு விடும். அதேபோல கார்ப்பரேட்கள், இந்துத்துவ அமைப்பு களுக்கு பலன் கிடைக்கிறது. இந்த அரசாங்கம் கார்ப்பரேட் - இந்துத்துவா அரசாங்கமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சொல்லி வரும் விமர்சனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலுவாக கூறுகிறோம்.
1000 ரூபாய் வழங்குக!
திராவிட முன்னேற்றக் கழக அரசு வந்த பிறகு, இந்த ஓராண்டு காலத்தில் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள னர். ஆனால் நிறைவேற்ற வேண்டிய வாக்குறு திகள் இன்னும் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், குடும்ப தலைவி களுக்கு உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்பது. தமிழக பெண்கள் பெரிய அளவில் இதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பல வன்முறைகளுக்கு கார ணமாக போதைப் பழக்கம் உள்ளது. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவது என்ற தேர்தல் வாக்குறுதி பேசப்படாமல் உள்ளது. மேலும், மேலும் கடைகள் திறக்கப் படும் நிலைதான் உள்ளது. எனவே, டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட முதல மைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போராடும் போக்குவரத்து தொழி லாளர்களின் கோரிக்கைகளுக்கு, உரிய முறையில் தீர்வு காணக் கூடிய, நியாயம் வழங்கக் கூடிய வகையில், உடனடியாக அவர்களுடைய பிரச்சனைகளை பேசி முடிக்க வேண்டும்.
‘தற்காலிகம்’ கூடாது!
எல்லா இடங்களிலும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் அல்லது தற்காலிக பணி நிய மனம் என்பது நீண்ட காலமாக, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியிலும் அது தொடர்கிறது. தற்காலிக ஆசிரியர் பணி நிய மனம் என அறிவித்துள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை கிடையாது. வெளியே சென்று விட வேண்டும் என்பதை யும் ஆணையாக சொல்லியுள்ளனர். ஆசிரியர் பணி என்பது மிக முக்கிய மான பணி. தொடக்கப் பள்ளி ஆசிரியரி லிருந்து, கல்லூரி விரிவுரையாளர் வரை தொகுப்பூதியம், தற்காலிக நியமனம் என்பது எந்த விதத்திலும் பொருத்தம் கிடை யாது. ஏற்கனவே, தொகுப்பூதியம், மதிப்பூ தியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழி யர்கள் உள்பட அனைவருக்கும், காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து தற்காலிக நியமனம், தொகுப்பூதி யம், மதிப்பூதியம் என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த நவீன தாராளமயப் பாதையிலிருந்து திமுக அரசு மாறுபட வேண்டும். எனவே, ஆசிரியர் தற்காலிக பணி நியமனத்தை நிறுத்திவிட்டு, நிரந்தர நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
‘சாஸ்த்ரா’ ஆக்கிரமிப்பு
தஞ்சை சாஸ்திரா நிறுவனம், புறம் போக்கு நிலம், அரசின் சிறைத்துறைக்கு மாற்றப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கட்டப் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட மற்ற அமைப்பு கள் நடத்தியுள்ளன. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னும் ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசு ஏன் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்க வில்லை என்பது தெரியவில்லை. சாதாரண மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்தால் அதை இடிக்க புல்டோசர், ஜேசிபி இயந்திரங்கள் வருகிறது. இது போன்ற பெரிய நிறுவனங்கள் வருடக்கணக்காக ஆக்கிர மிப்பு செய்து, நீதிமன்றத்தில் வழக்காக போட்டு கொண்டிருப்பார்கள். அரசு சும்மா இருக்க முடியுமா? மாற்று இடம் கொடுத்தா லும்கூட பல்வேறு காரணங்களுக்காக அதனை ஏற்கக்கூடாது. ரெவினியூ ஸ்டாண் டிங் ஆர்டரில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் கண்டிப்பாக சாஸ்த்ராவுக்கு பொருந் தக் கூடாது. மற்ற இடங்களில் தேவைக்குத் தகுந்தாற்போல் முடிவு செய்யலாம். அந்த இடத்தை மீட்டு சிறைத் துறைக்கு பயன்படுத்தலாம் அல்லது சாதாரண மக்கள் பட்டா கேட்டு பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், ஏழை மக்களுக்கு பட்டா கொடுக்கலாம். ஆக்கிரமிப்பிலிருந்து அந்த இடத்தை அகற்றுவதற்கு தமிழக அரசு திட்ட வட்டமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ‘ஏழைக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி’ என ஏற்பட்டு, அதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
தென்னை விவசாயிகள் நிலை
தஞ்சையைப் பொருத்தவரை தென்னை விவசாயிகள் போராட்டம் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. வரக்கூடிய காலங்களில் வலுவான போராட்டம் நடைபெறக் கூடிய சூழலும் உள்ளது. கொப்பரைத் தேங்காய்க்கு கிலோ ரூ.150 என நிர்ணயம் செய்து, அரசே கொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்து, அதற்கான தொகையை தாமதம் இல்லாமல் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பச்சை தேங்காய்க்கு கிலோ ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசா யிகள் வலியுறுத்தி வருகின்றனர். அரசு தென்னை விவசாயிகள் கோரிக்கையை நிறை வேற்றித் தர வேண்டும். விவசாயிகள் கோரிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.