பாபநாசம், ஜூன் 15 - கும்பகோணம் - தஞ்சா வூர் மெயின் சாலை தமிழ கத்தின் முக்கியமான சாலை களுள் ஒன்று. இந்தச் சாலை கடந்த கும்பகோணம் மகா மகத்திற்கு முன்னர் போடப் பட்டது.
தற்போது சாலையோ ரம் மழைநீர் வடிகாலுடன் சாலை அமைக்கப்படுகிறது. பாபநாசம் மெயின் சாலை யில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் பணி முழுமை பெறாமல், ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் பள்ளத்தை கவனிக்கா விட்டால் அதில் விழுந்து காயம் ஏற்படும். இதனால் மெயின் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாரக் கணக்கில் நடக்கும் இந்தப் பணியை, விரைந்து முடிக்க பாபநாசம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.