கும்பகோணம், மே 7- தஞ்சை மாவட்டம் திருபுவனம் சிஐடியு டாஸ்மாக் சுமை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனம் டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வம், பிரபு, சாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜேசுதாஸ், திருவிடைமருதூர் தெற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், மாதர் சங்க பொறுப்பாளர் அறிவு ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சுமை பணியாளர்களுக்கு ஏற்று கூலி பெட்டிக்கு ஒன்றுக்கு ரூ.3.50 வழங்க வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ திட்டத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படி அமலாக்க வேண்டும், டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1,85,000-ஐ தாய் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் பெற்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.