தஞ்சாவூர், ஏப்.22 - தேசிய அளவில் ஒவ் வொரு ஆண்டும் ஏப்.24 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளி லும் ஏப்ரல் 24 (ஞாயிற்றுக் கிழமை) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வுள்ளது. இதில் வறுமை ஒழிப்பு, நல வாழ்வு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி தொடர் பான திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், உறுதி மொழி எடுத்திடவும் வேண்டும். எனவே நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத் தில் அனைத்து கிராம பொது மக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.