districts

img

சொக்கநாதபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

பட்டுக்கோட்டை, ஏப்.8-  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் 36 ஆவது ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.  நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் போட்டி துவங்கி நடைபெற்றது.  போட்டியை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் உறுதிமொழி கூறி துவக்கி வைத்தார்.  வீரர்களும் மற்றும் விழா கமிட்டியினரும் உறுதிமொழி  ஏற்ற நிலையில் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.  வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், கால்நடை உதவி இயக்குநர்கள் சுமதி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.