தஞ்சாவூர், அக்.30- பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில், 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டுள்ளன. தஞ்சை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ, 1,050 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கண்காணிப்பு கேமராக்கள் பழைய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிக ளில் நவீன வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அலுவலகத்தி லும், காவல் கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் ஏதே னும் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தால், கண் காணிப்பு அறையில் இருந்து ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிப்பர். இதற்காக வெப் கேமராவிலிருந்து கட்டுப்பாட்டு மையத் திற்கு பேசும் வசதியும் உள்ளது. இதன் மூலம் குற்ற செயல்கள் தடுக்கப்படும். இந்த ஏற்பாடுகளை மாநகர மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகர் நல அலுவலர் அசோகன் உடனி ருந்தனர்.