districts

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை பெற்றோர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், மே 29 -  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தஞ்சாவூர் மாவட்டத் திலுள்ள அனைத்து சிறு பான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட (எஸ்.சி,  எஸ்.டி, பி.சி, எம்.பி.சி.,  மற்றும் டி.என்.சி பிரிவைச்  சேர்ந்தவர்கள்) மற்றும்  நலிவடைந்த பிரிவினரின் (பெற்றோரின் ஆண்டு  வருமானம் ரூ.2 லட்சத்துக் கும் குறைவாக உள்ளவர் கள்) குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது.  இந்த வகையில், தஞ்சா வூர் மாவட்டத்தில் 3,790  இடங்கள் ஒதுக்கீட்டுக்காக  நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. மாவட்டத்தில் உள்ள 258 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், 213 பள்ளிகளில் ஒதுக்கீடு செய் யப்பட்ட இடங்களுக்கு மேல்  விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன.  எனவே, மே 30 (திங்கட் கிழமை) அன்று, முதன்மை கல்வி அலுவலரால் நியமிக் கப்படும் துறை பிரதிநிதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் 25 விழுக்காடு ஒதுக்கீட் டிற்கு, குலுக்கல் முறையில்  சேர்க்கை நடைபெற உள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு  செய்யப்பட்ட விண்ணப்பதா ரர்களின் விவரங்கள், காத்தி ருப்பு பட்டியல் விபரங்கள், மே 31 அன்று பள்ளியின் தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் வெளி யிடப்படும்.  எனவே, 2022-23 ஆம்  கல்வியாண்டில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில், சிறு பான்மையற்ற தனியார் சுய நிதிப் பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்கேஜியில் சேர்க்கை செய்வதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் மே 30 அன்று சம்பந்தப்பட்ட பள்ளியில் காலையில் நடை பெறும் குலுக்கலில் குறிப் பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். பொதுத் தேர்வு மையமாக செயல் படும் பள்ளிகளில் அன்றைய  தினம் பிற்பகலில் குலுக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார்.