தஞ்சாவூர், பிப்.11 - ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவம் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படு கின்றன. அலங்கார ஊர்திகளில் இடம்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப் போட்டியில், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் ஏ.திருவள்ளுவன் புதன்கிழமை, தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவி லான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். அவருக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் கே.திராவிடச் செல்வம், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று, பேச்சுப் போட்டியில் முதலி டம் பெற்ற மாணவன் ஏ.திருவள்ளுவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.சக்திவேல், முது கலை தமிழாசிரியர் எஸ்.சகாதேவன் ஆகி யோர் உடனிருந்தனர்.