districts

தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பெற்றோர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 19 - தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மார்ச் 20 (ஞாயிற் றுக்கிழமை) நடைபெற உள்ளது.  இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மு.சிவக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  “2021 - 22 ஆம் கல்வி யாண்டில் அனைத்து அரசுப்  பள்ளிகளில் பயிலும் மாண வர்களின் பெற்றோர்க ளுக்கு, மார்ச் 20 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பெற்றோர் களுக்கு பள்ளி மேலாண் மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வித் துறையால் அறிவுறுத்தப் பட்டுள்ளது.  அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொ டக்க நிலை, நடுநிலை,  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரி யர்கள் மற்றும் ஆசிரி யர்கள் இணைந்து பள்ளி  மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர் களின் கடமை மற்றும் பள்ளி  மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு குறித்து விழிப்பு ணர்வு வழங்க தெரிவிக்கப் பட்டுள்ளது.  மேலும், கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்து கொள்வதற்கான அவசியம் குறித்து இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. பள்ளி மேலா ண்மைக் குழு மறுகட்ட மைப்பு சார்ந்த விரிவான வழி காட்டுதல்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  மேலும், ஏப்ரல் முதல்  வாரத்திலிருந்து பள்ளி  மேலாண்மைக் குழு மறுகட்ட மைப்பு நடைபெறும், மறு கட்டமைப்பு செய்வது தொடர் பான கால அட்டவணை மற்றும் நடைபெறும் நாள்  குறித்து விரைவில் தெரி விக்கப்படும். எனவே, அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மார்ச் 20 அன்று நடைபெறும் பள்ளி  மேலாண்மைக்குழு விழிப்பு ணர்வு கூட்டத்தில் கலந்து  கொள்ளுமாறு” தெரிவிக்கப் பட்டுள்ளது.