districts

மாற்றுத்திறனாளி தம்பதிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

கும்பகோணம், ஏப்.23 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடை மருதூர் வட்டம் திருவிசநல்லூர் கிராமத்தைச்  சேர்ந்த வயதான ஏழை மாற்றுத்திறனாளி தம்பதியர்களான கௌரி - அண்ணாதுரைக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சந்தித்து வழங்கி னார்.  பின்னர் கும்பகோணம் வட்டம் கொர நாட்டு கருப்பூர் கிராமத்திற்கு நேரடியாக  சென்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களை  சந்தித்து அனைத்துத் துறை சம்பந்தமான தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந் தார். மேலும் 50 சதவீத மானிய விலையில்  ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய  வேளாண் இடுபொருட்களை விவசாயி களுக்கு வழங்கினார். பனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் குளம், குட்டை, வாய்க்கால் ஓரங்களில் நடுவதற்கு கொரநாட்டு கருப்பூர்  ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி யிடம் வழங்கப்பட்டது. முன்னோடி விவசாயி கள் அம்பிகாவதி இளங்கோவன் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.