தஞ்சாவூர், செப்.2 - தஞ்சாவூர் மாநகராட்சி அலுவல கத்திற்கு எதேச்சையாக வந்த திரைக்கலை ஞர் பிரபு தஞ்சை மேயர், துணை மேயர், ஆணையர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திரைக்கலைஞர் பிரபு, தனது மனைவி புனிதாவுடன் வியாழக்கிழமை வந்திருந்தார். பின்னர், அவர் திடீரென தஞ்சை மாநகராட்சி அலுவல கத்துக்கு வந்தார். அவரை மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பிரபுவும் அவர் களுக்கு பொன்னாடை போர்த்தினார். பின்னர் திரைக்கலைஞர் பிரபு, மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் பிரபு கூறுகையில், “தஞ்சை மாநகராட்சி முன்பு இருந்ததைப் போல இல்லை. தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி யாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அமைந்துள்ள பகுதியில், மாநகராட்சி சார்பில் மின் விளக்கு வசதி செய்து கொடுக் கப்பட்டுள்ளதுடன், சிறப்பாக பராமரித்து வரு வதற்கும் மாநகராட்சிக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார். அப்போது மாநகராட்சி செயற்பொறி யாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன் ஆகி யோர் உடனிருந்தனர்.