districts

img

ரெகுநாதபுரம் அரசுப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

பாபநாசம்,  ஜூலை 14 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் முன்புறமுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விட்டது. இதேபோன்று பக்கவாட்டு சுற்றுச்சுவரின் இரண்டு பக்கத்தில் ஒரு பகுதி இடிந்த நிலையில் உள்ளது. 

மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளியைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரை முற்றிலும் இடித்து விட்டு, புதிதாக உயரமாக, தரமாக கட்ட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதேபோன்று பள்ளியில் ஒரு ஓடு வேய்ந்த கட்டடம் பயன்பாட்டில் இல்லை. அதையும் இடிக்க வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பள்ளி கட்டடத்தில் மழை நாட்களில் நீர் கசிகிறது. இதையும் சரி செய்து தர வேண்டும். சமீபத்தில் கூட மாவட்ட ஆட்சியர் இப்பள்ளியில் கல்வியின் தரம், உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் இப்பள்ளி மீது கவனம் செலுத்தி மேற்கண்ட கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.