districts

காலிப்பணியிடங்களை ரத்து செய்ய மின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர், மார்ச் 18-  மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு  ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்க  வேண்டும். அவுட்சோர்சிங் நடவடிக்கை யைக் கைவிட வேண்டும். காலிப் பணி யிடங்களை ரத்து செய்யக்கூடாது.  பழைய  பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, மார்ச் 28-ஆம் தேதி சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்திலிருத்து கோட்டை நோக்கி  நடைபெற உள்ள பேரணி  விளக்கி  மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தஞ்சா வூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியா ளர் அலுவலக வாயிலில் பிரச்சாரம் நடை பெற்றது.  எம்ப்ளாயிஸ் பெடரேஷன் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ராஜாராமன், தொழிலா ளர் சம்மேளன செயலாளர் பொன்.தங்க வேல், பொறியாளர் சங்க மாநில நிர்வாகி சுந்தர்ராஜ், ஐக்கிய சங்க தலைவர் பால முருகன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி  பஞ்சு ராஜேந்திரன், ஜனதா சங்க தலை வர் பூபதி,  அம்பேத்கர் சங்க நிர்வாகி ஜெயச்  சந்திரன், ஏஇஎஸ்யூ சங்க நிர்வாகி பழனி நாதன், ஐஎன்டியூசி சங்க செயலாளர் பால்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு நிர்வாகிகள் காணிக்கைராஜ், அதி தூத மைக்கேல்ராஜ், சங்கர், ரவி, ஷேக் அக மது உஸ்மான் உசேன், அறிவழகன், கலைச்  செல்வன், செந்தில்வேல், கோபால்சாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.