districts

இஸ்லாமிய அடக்கத் தலத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து தருக!

தஞ்சாவூர், ஜூலை 18-  பேராவூரணி இஸ்லா மிய மக்கள் அடக்கத்தலத் துக்கு சுற்றுச்சுவர் அமைத் துத் தர வேண்டும் என பேரா வூரணி முஸ்லிம் ஜமாத்  சார்பில், தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் ச.முர சொலி மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகி யோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசல் தலைவர் அப்  துல் முத்தலிப், செயலா ளர் சம்சுதீன், பொருளாளர்  கான்முகமது மற்றும் நிர்வா கிகள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது,  

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரில் சுமார் 15ஆயிரம் இஸ்லாமிய மக் கள் வசித்து வருகிறோம். எங்களுக்கான அடக்கத் தலம் (மையவாடி) பட்டுக் கோட்டை சாலையில் காட் டாற்று பாலம் அருகில் உள்  ளது. தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் பேராவூரணி  பேரூராட்சி தலைவராக இருந்த காலத்தில் மெயின்  சாலையிலிருந்து மையவாடி  வரை சாலை வசதியும், மூன்று புறமும் சுற்றுச்சுவர் அமைத்து தந்துள்ளார். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்ற காரணத்தால் ரயில்வே லைனை ஒட்டிய  பின்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க முடியவில்லை.

தற்போது பணிகள் முடிந்து  ரயில்வே துறையால் எல் லைக்கல் நடப்பட்டுள்ளது. மூன்று புறமும் சுற்றுச்சுவர்  இருந்தும் ஒரு பகுதியில் இல்  லாத காரணத்தால் இறந்த வர்களை அடக்கம் செய்து விட்டு வந்த பிறகு, அந்த இடங்களை நாய்கள், பன்றி கள் உள்ளே புகுந்து தோண் டுவது வாடிக்கையாக உள்  ளது.

மேலும் ரயில்வே லயன்  வழியாக வரும் சிலர் மைய வாடியினை திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தி  அசுத்தம் செய்து விட்டு சென்று விடுகின்றனர். எனவே ரயில்வே லைனை ஒட்டியுள்ள பின்பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தங்களது தொகுதி மேம்  பாட்டு நிதியில் இருந்து நிதி  ஒதுக்கீடு செய்து சுற்றுச்சுவர்  அமைத்து தர வேண்டும்.  இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.  மனுவின் நகல் சட்ட மன்ற உறுப்பினர் நா. அசோக்குமாரிடமும் வழங் கப்பட்டது. மனுவை பெற் றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர்  நிச்சயம் சுற்றுச்சுவர் அமைத்து  தரப்படும் என உறுதி அளித்த னர்.