கும்பகோணம், ஜன.2- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திரு மண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சார் பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் விவசாயிகளின் பெயரில் வங்கி நிர்வாகமும் ஆலை நிர்வாகமும் மோசடியாக வாங்கிய கடனை திருப்ப செலுத்த வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேல் விவசாயி கள் போராடி வருகின்றனர். கரும்பு விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் கும்பகோணம் ஒன்றியம் நாகக்குடி, ஆத னூர், திருப்புறம்பியம், பட்டீஸ்வரம் ஆகிய நான்கு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காசி நாதன், விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜா செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.