கும்பகோணம் பிப்.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மெயின் ரோடு திருபுவனம் சாலையோரம் புல எண். 492/13 திருவிடைமருதூர் மாதா கோயிலை சேர்ந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டாண்டு காலமாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறை தோட்டம் இருக்கிறது. தற்போது திருவிடைமருதூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக் கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த சாலை விரிவாக்க பணியால் காலங் காலமாக பயன்படுத்தி வந்த கிறிஸ்துவர்களின் கல்ல றைத் தோட்டம் முற்றிலும் எடுக்கப்பட்டு அதன் மீது சாலை வருகிறது. அண்மையில் இறந்த வர்களின் உடல்களை அங்கு புதைத்து கல்ல றைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். கல்லறையை எடுக்காமல் சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திருவிடைமருதூர் மாதா கோயில் தெருவாசிகள் சார்பில் கும்பகோணம் உட்கோட்ட பொறியாளரிடம் மனு கொடுத்த னர்.
அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், கல்லறைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து தரப்படும். அதுவரை தற்போது உள்ள வேலைகள் நிறுத்தி வைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சாலை போடும் பணி தற்காலி கமாக நிறுத்தப்பட்டது. ஆனால் 300 குடும்பத்திற்கு மேல் வாழும் இப்பகுதியின ரின் கல்லறைத் தோட்டம் சேதமடையாமல், அந்த இடத்திலேயே சாலையை சற்று ஒதுக்கி அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இப்பேச்சுவார்த்தையில், திருவிடைமரு தூர் வட்டாட்சியர், கும்பகோணம் கோட்ட பொறியாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர்கள் சா.ஜீவ பாரதி, பக்கிரிசாமி மற்றும் அப்பகுதி பொது மக்கள் பங்கேற்றனர்.