districts

img

திருபுவனம், திருவிடைமருதூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்துக! மாதர் சங்கம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

கும்பகோணம், ஜூன் 3 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய ஒன்றிய  மாநாடு திருவிடைமருதூரில் நடைபெற் றது. மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் வசந்தா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் எம்.அறிவுராணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் கலைச்செல்வி நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திட வேண்டும்.  திருபு வனம், திருவிடைமருதூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை  உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சாலை, குடிநீர், தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தேவையான வசதி களை உடனே செய்து கொடுக்க வேண்டும். திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், மருத்துவ பணியா ளர்கள், மருந்துகள், மருத்துவ உபகர ணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து  கொடுக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பேரூராட்சி பகுதி களில் விரிவுபடுத்தி திட்டத்தில் உள்ள  குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.  ரேசன் கடையில் அனைத்து பொருட்க ளையும் தடையில்லாமல் வழங்கி மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாதர் சங்க திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியத் தலைவராக எம்.அறிவுராணி, ஒன்றியச் செயலாள ராக ஜி.அம்சவள்ளி, பொருளாளராக தேவி உள்ளிட்ட 15 பேர் கொண்ட புதிய  ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.