districts

img

சாலைகளில் உலாவும் மாடுகளை பிடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூர், பிப்.2-  தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக ளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் இடை யூறாகச் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணி யாளர்கள் மூலம் பிடித்து காப்பகத்துக்குக் கொண்டு சென்றனர். கால்நடைகளைப் பிடிக்கும் பணி மேயர் சண்.ராமநா தன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவண குமார், மாநகர் நல அலுவலர் வீ.சி.சுபாஷ் காந்தி ஆகி யோர் முன்னிலையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.  இதில், தஞ்சாவூர் தெற்கு வீதியிலும், அய்யாசாமி வாண்டையார் நினைவு பழைய பேருந்து நிலையத்திலும் சுற்றித் திரிந்த இரு மாடுகளைப் பணியாளர்கள் பிடித்து காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மாடு களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.