தஞ்சாவூர், ஜூலை 29- மேட்டூரில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரை கடலில் சேர்க்காமல், பாசனத்துக்கு பயன்படும் வகையில் நீர் நிலைகளில் சேமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை தீக்கதிர் சந்தா வழங்கும் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. வேலையில்லா இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு குறித்து பட்ஜெட்டில் எதுவும் இடம்பெற வில்லை. இதனை கண்டித்து ஆகஸ்ட் 1 அன்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி கள் சார்பில் ஒன்றிய அரசு அலுவல கங்கள் முன்பு மறியல் போராட்டம் நடை பெறவுள்ளது.
அதேபோல் தமிழக அரசு உயர்த்தி யுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மின் கட்டணத்தை மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டும்.
தற்போது மேட்டூர் அணை திறக்கப் பட்டுள்ளது, டெல்டா மாவட்ட விவசாயி கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கர்நாடக அரசு மனமுவந்து இந்த தண்ணீரை கொடுக்கவில்லை. உச்சநீதிமன்றமும் அதற்கான உத்த ரவை அமல்படுத்த நிர்ப்பந்திக்க வில்லை. மழை அதிகம் பெய்துள்ள தால், கர்நாடகாவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் தமிழ கத்துக்கு திறந்து விட்டுள்ளனர். எனவே இந்த தண்ணீரை கடலில் கொண்டு போய் சேர்க்காமல், பாசனத்துக்கு பயன்படும் வகையில் நீர் நிலைகளில் சேமிக்க வேண்டும்.
தற்போது குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது. தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் மண் எடுக்கும் பணியை நிறுத்த வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். இதில் கோயில், அறக்கட்டளை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.