தஞ்சாவூர், ஜன.28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாப நாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த புகாரின் பேரில் மெலட்டூர் அருகே ஏர்வாடி கிராமத்தைச் சேர்ந்த டீ கடை வைத்திருந்த ஜெ.நாகராஜன் (60) என்ப வரை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3ஆ-ம் தேதி காவல் ஆய்வாளர் புஷ்பவள்ளி கைது செய்தார். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் காவல் ஆய்வாளர் பகவதி சரணம் ஆஜராகி வந்தார். இதையடுத்து வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நாகராஜனுக்கு 27 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டார்.