districts

செந்தலைவயல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்.14-ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.5-  சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு  இயக்கத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்தியாவின் இருள் அகற்று வோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டு வோம் என்பதை விளக்கி, தஞ்சை மாவட்டம் முழுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வரு கிறது. இதையொட்டி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செந்தலைவயல் கிராமத் தில், சிபிஎம் நிர்வாகிகள் பிரச்சாரத் திற்கு சென்றபோது, கிராம மக்கள் நல்ல  வரவேற்பு அளித்ததுடன் மார்க்சி ஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்  கொள்கிறோம் என்று ஆர்வமாக கூறி னர். பிரச்சார முடிவில், ஆதரவாளராக சேர விரும்பியவர்களை அழைத்து கட்சி நடைமுறைகள், அரசியல் சூழல் கள் குறித்து பேசப்பட்டது. அப்போது கிராமத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்ச னைகளையும் கூறினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பி னர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர்  குத்புதீன் ஆகியோர், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நாம் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறு வோம் என்றனர். செந்தலைவயல் கிராமத்திற்கு தபால் நிலையம், தேசிய மயமாக் கப்பட்ட வங்கி, கடற்கரை மீன்பிடி துறை முகத்திற்கு வலைகள் உலர்த்தும் இடம், துறைமுகத்தை தூர்வாரி படகு கள் நிறுத்த இடவசதி, கடற்கரை ஓரத்தை ஆக்கிரமித்துள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், உள் சாலை களை பராமரித்து மேம்படுத்துதல், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்  வழிகளை தூர்வாருதல், குடிமனை இல்லாதோருக்கு குடிமனைப் பட்டா  வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை களை தமிழக அரசு நிறைவேற்றித் தர  வலியுறுத்தி, செப். 14 ஆம் தேதி, செந்த லைவயலில் கிழக்கு கடற்கரை சாலை யில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

;