districts

img

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நவீன தானியங்கி பரிசோதனை கருவிகள்

தஞ்சாவூர், டிச.6-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 3 நவீன தானியங்கி பரி சோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டு, வியாழக் கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள நுண்ணு யிரியல் துறை ஆய்வகத்தில் ரத்தத்தி லுள்ள கிருமிகளைக் கண்டறிய உதவும்  தானியங்கி ரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி, கிருமிகளை வகைப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறனைக் கண்டறிய உதவும் வை டெக் என்கிற இரு  கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை,  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். விழாவுக்கு தலைமை வகித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் பேதும்போது,  “தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவிகளின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம்.  தற்போது நடைமுறையிலுள்ள பரிசோதனை  முறைகள் மூலம் ரத்தத்திலுள்ள பாக்டீரி யாக்களை கண்டறிய 4 நாட்களும், பூஞ்சை களைக் கண்டறிய 10 நாட்களும் காத்திருக்க  வேண்டும்.  

இந்த நவீன தானியங்கி கருவியின் பயன்பாட்டால் ரத்தத்திலுள்ள பாக்டீரி யாக்களை 24 மணி நேரத்துக்குள்ளும், பூஞ்சைகளை 48 மணி நேரத்துக்குள்ளும் கண்டறியலாம். மேலும், இந்தக் கருவியின் மூலம் ஒரே நேரத்தில் 30 முதல் 60 ரத்த மாதிரி களைப் பரிசோதிக்க முடியும். வெளியி லுள்ள தனியார் ஆய்வகங்களில் ரூ.700 மதிப்பில் செய்யப்பட்டு வரும் இந்த ரத்தப்  பரிசோதனைகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முற்றிலும் இலவசமாக செய்யப் படுகிறது.

இக்கருவிகளில் பரிசோதனை முடிவுகள் விரைவாகக் கிடைப்பதால் நோயா ளிகளுக்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு, விரைவில் குணமடைவர்” என்றார். இவ்விழாவில் நிலைய மருத்துவ அலு வலர் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ  அலுவலர் முகமது இத்ரீஸ், நுண்ணுயிரி யல் துறைத் தலைவர் யூனிஸ், ஸ்வர்ணா,  ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.