தஞ்சாவூர், டிச.23- தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்ட பத்தைப் புனரமைப்பதற்காகத் திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது என பொதுப் பணித் துறை (கட்டடங்கள்) அரசு முதன்மைச் செய லர் க.மணிவாசன் தெரிவித்தார். தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்ட பத்தில் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபம் புனரமைக்கப்பட்டு, பொலிவூட் டப்படும் எனவும் தமிழக முதல்வர் அறி வித்தார். இதன்படி, மண்டபத்தைச் சீரமைக்க வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியருடன் கலந்தாலோசித்து, இதற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணியைப் பொதுப் பணித் துறை மேற்கொண்டு வருகிறது. இதில், அத்தியாவசிய பணிகள், மண்ட பத்தை மேம்படுத்துவது, குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் போன்றவை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்ப டையில் மதிப்பீடு தயார் செய்யப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள பல்வேறு பாரம்பரிய கட்டடங்களையும் பழமையான முறையில் சிறப்பாகக் கொண்டு வரும் பணியையும் பொதுப் பணித் துறை செய்து வருகிறது. தஞ்சாவூர் அரண்மனைக்கு கடந்த ஆண்டு பொதுப் பணித் துறை மூலம் ரூ. 2 கோடிக்கும் அதிமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிகழாண்டு மூன்று பணி களுக்கும் மேலாக கிட்டத்தட்ட ரூ. 8 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சியர் (வரு வாய்) என்.ஓ.சுகபுத்ரா, பொதுப் பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.