districts

img

தஞ்சாவூர் மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற முயற்சி மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்

தஞ்சாவூர், அக்.6- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு, தேசிய தரச்சான்று பெற  முயற்சிக்கப்பட்டு வருவதாக புதிதாக  பொறுப்பேற்று கொண்ட மருத்துவக்கல் லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன் தெரி வித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு புதிய முதல்வராக ஆர்.பாலா ஜிநாதன் நியமிக்கப்பட்டு, வியாழனன்று அவர் பொறுப்பேற்றார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது: பழமையான, மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக உள்ள தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதால், இப்பகுதி மக்களிடம் நம்பிக்கையை பெற்று திகழ்கிறது.  மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் அதிகளவில்  இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட தால் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்  றுள்ளது. இதை முதலிடத்துக்கு கொண்டு வரும் வகையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். தேசிய தரச்சான்றிதழ் பெற தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. இதில் நோயாளிகளை கனிவாக கவ னித்தல், விரைவாக சிகிச்சை அளித்தல், சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல் உள்  ளிட்ட பல சேவைகளை செய்து வரு கிறது. மருத்துவமனையில் போதியளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. தட்டுப்பாடு ஏதும் இல்லை. புற நோயா ளிகளுடைய சிகிச்சை முறைகள் தொடர் பாக கணினியில் ஏற்கெனவே பதிவு செய்  யப்பட்டுள்ளது.  இதில் சில மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்ததும், நோயாளி ஒரு வர் தன்னிடம் உள்ள அடையாள எண் ணைக் கொண்டு மாநிலத்தில் எந்த மருத்து வமனையிலும் சிகிச்சையும், மருந்து மாத்தி ரைகளையும் வாங்கிக் கொள்ள முடியும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள  பன்நோக்கு மருத்துவ சிகிச்சை மையத்தின் அருகிலேயே சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவை அமைக்கப்படும். தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்து வமனையில் மகப்பேறு பிரிவில் உரிய  வசதிகள் ஏற்படுத்துவதோடு, அங்கு பெண் பாதுகாவலர்களை நியமிக்கப்படுவர்” என்றார்.

;