தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி சார்பில் கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற “தமிழோடு விளையாடு” நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவர்கள் அஜய், வருண்குமார், நிறைமதி ஆகியோருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் அம்மாசத்திரம், திருபுவனம் கிளைகளின் சார்பில் பாராட்டி, அன்பளிப்பாக புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சங்க பொறுப்பாளர்கள், கார்த்திக் வித்யாலயா பள்ளி தாளாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.