தஞ்சாவூர், ஜூலை 13 - மாணவர்கள் மத்தியில் நூல் வாசிப்பை ஊக்கப் படுத்தும் வகையில், தஞ்சா வூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரு கிறார். இதையொட்டி, “ஒரு நாள், ஒரு நூல்” வாசிப்பு இயக்கம் தொடங்கி நடை பெற்று வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் மு.சிவக்குமார் திங்க ளன்று புத்தக வாசிப்பு இயக் கத்தில் பங்கேற்ற பின், தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி, தனி யார் பள்ளி என 729 பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங் கேற்று ஒரு வாரம் புத்தகம் வாசிக்க உள்ளனர் என தெரி வித்தார். பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை அன்று புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளி கள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவரும் குமரப்பா பள்ளித் தாளாள ருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து சிறப்பு ரையாற்றினார். வாசிப்பு இயக்கத்தில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.