கும்பகோணம், மார்ச்.10- இந்தியாவிலேயே தமிழ கத்தை சேர்ந்த விவசாயிகள் தான் கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை முயற்சி வருவதாக தமிழக கூடுதல் தலைமை செயலாளர் ஜனகர் கூறினார். கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட் பட்ட கருவளச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடை பெற்றது. முகாமினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார். கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் முகாம் குறித்து விளக்க உரையாற்றி னார். முகாமில் ஏராளமான கால் நடைகளுக்கு நோய் குறித்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய மருந்து களும் வழங்கப்பட்டது மேலும் பல மாடுகளுக்கு சினை ஊசி களும் கோமாரி தடுப்பூசி போ டப்பட்டது. மேலும் பராமரிப்பு டன் வளர்க்கப்பட்ட சிறந்த மாடு களுக்கு சிறப்பு பரிசு வழங்கப் பட்டது இதனை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூடுதல் தலைமை செய லாளர் ஜவகர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இம் முகாம் 229 ஆவது கால்நடை மருத்துவ முகாமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாம் கள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பசு மாடு கள் சுமார் 58,000 கோழி இனங்கள் இருப்பதாகவும் இதன் மூலம் 14 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாகவும் இந்தியாவி லேயே தமிழகத்தை சேர்ந்த விவ சாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் 40 சதவீத வருவாய் ஈட்டித் தருவதற்கும் அதனை மேலும் அதிகரிக்க தமிழக அரசின் கால் நடை பராமரிப்புத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.