கும்பகோணம், மே 9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் கண்ணில்படுவது கோயில் அருகே உள்ள மிகப்பெரிய குப்பை மலை தான். அப்பகுதியில் உள்ளோர் கொண்டு வந்து கொட்டும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும் சிலர் அந்த குப்பைக்கு தீ வைப்பதால் கரும்புகை எழுகிறது. இதனை சுவாசித்தால் பல்வேறு சுவாசக் கோளாறு கள் கண்டிப்பாக ஏற்படும். இந்த குப்பை மலை 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருப்ப தால், அப்பகுதி முழுவதும் புகை மண்டல மாக மாற்றி வருகிறது. இதுமட்டுமின்றி, கடும் துர்நாற்றமும் அவ்வழியே செல்வோரை தாக்கி வாந்தி எடுக்க வைக்கிறது. சற்று தள்ளி செல்லலாம் என்றால், அங்கு அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. மேலும் மது பிரியர்கள் அரசலாறு பாலத்தை நிரந்தர குத்த கைக்கு எடுத்தது போன்று, எந்நேரமும் அங்கேயே குடிப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதி முழுவதை யும் கரும்புகை சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் இவ்வழியை சாகச பயணம் போல் கடந்து செல்கின்றனர். எனவே குப்பைகள் இங்கு கொட்டப்படா மல் தடுப்பதோடு, குவிந்து கிடக்கும் குப்பை களை உடனே அப்புறப்படுத்த அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.