districts

நாச்சியார்கோவில் சீனிவாச  பெருமாள்  கோயிலில் கல்கருட சேவை

கும்பகோணம், மார்ச் 14- கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனி வாசபெருமாள் கோயிலில் ஞாயிறன்று இரவு  கல்கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயில் 108 திவ்யதேசங்களில் 20  ஆவது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14 ஆவது திருப்பதியா கவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராக வும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபக வான் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் உற்ச வராக வீதியுலா வருவது பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திரு விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 10 அன்று நடைபெற்றது.  நான்காம் நாள் விழாவான உலக பிரசித்தி  பெற்ற கருடசேவை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை இரவு  நடைபெற்றது. இந்த கருடசே வையின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள்  கோயிலின்  வெளிப்புறமும், உள்புறமும் காத்தி ருந்து தரிசனம் செய்தனர். 9 ஆம் நாள் விழா வாக மார்ச் 18 ஆம் தேதி காலை திருத்தேரோட்ட மும், மதியம் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.  கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில்  கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்ற  கல்கருட சேவை இவ்வாண்டு பக்தர்கள் பங்கேற் போடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.