districts

கடைமடையில் தூர்வாரும் பணியை தொடங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.29 - தஞ்சையில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகி யோர் கோரிக்கை மனு அளித்தனர்.  த.வி.ச மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் அளித்த மனுவில், “ஜூன் 12  ஆம் தேதி உரிய காலத்தில், மேட்டூர்  அணையிலிருந்து டெல்டா பாசனத் திற்கு தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் அதேவேளையில், ஆறு கள், பாசன வாய்க்கால்கள், குளங்கள்  மற்றும் வடிகால்கள் ஆகியவற்றை  விரைந்து தூர்வார வேண்டும் என்ற  கோரிக்கை அனைத்து விவசாயி களாலும் முன்வைக்கப்படுகிறது.  பல இடங்களில் கல்லணை கால் வாய் கடைமடைப் பாசனப் பகுதியில், குறிப்பாக சேதுபாவாசத்திரம், பேரா வூரணி பகுதியில் சி, டி பிரிவு வாய்க்கால் களையே காணவில்லை என்ற நிலைமை  உள்ளது. இதனால், தண்ணீர் தட்டுப்பா டின்றி கிடைத்தாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராமல் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உள்ளது. எனவே, கடைமடைப் பாசனம் வரை உடனடியாக தூர்வாரும் பணியை முழு மையாக செய்திட வேண்டும். பல ஏரி கள், குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளன. அதனை உடனடியாக அகற்றிட வேண்டும். மணக்காடு, நெல்லியடிக் காடு, வீரக்குடி, சோழகனார்வயல், கொரட்டூர் மற்றும் பல ஏரிகள் ஆக்கிர மிப்பு காரணமாக நீர் தேக்கி வைப்பதில்  சிரமம் உள்ளது.  எனவே, அனைத்து ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலை களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள்  தலைப்பிலிருந்து தொடங்கப்படுகிறது. கடைமடைக்கு செல்லும் முன் ஆற்றில்  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடைமடைப் பகுதியில்  தூர்வாரும் பணிகள் நடைபெறு வதில்லை. எனவே, இந்தாண்டு தூர்வா ரும் பணியை கடைமடையில் இருந்தும்  துவங்க வேண்டும்” என கூறப்பட்டுள் ளது.

ராணி வாய்க்காலை பாதுகாத்திடுக!
த.வி.ச மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் அளித்த கோரிக்கை மனுவில், “கடந்த ஆண்டு குறுவை  அறுவடை மற்றும் சம்பா பயிர்கள் மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒரு  பகுதியினருக்கு இடுபொருள் நிவா ரணத் தொகை கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய தலை யீடு செய்து பெற்றுத்தர வேண்டும். தற்போது நடைபெற்று வரும் தூர்வா ரும் பணிகளை, எவ்வித முறைகே டும் இல்லாமல் விரைந்து முடிக்க வும், இப்பணிகளை கண்காணிக்க விவ சாயிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.  தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்  பகுதியில் நடைபெற்று வரும் ஆற்றுப்பா லம் கட்டுமானப் பணிகளால், பழைய ராணி வாய்க்கால் நீர் வழிப்பாதை முற்றி லும் அழிக்கப்படுகிறது. எனவே, ராணி  வாய்க்கால் நீர் வழிப்பாதையை காப்பாற் றவும், அதன் மீது உள்ள பெரும் நிறு வனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற் றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில், இப்போதே உலர்களங் களை உருவாக்கும் பணியைத் துவங்கி,  கோடைக்காலம் முடிவதற்குள் பணி களை நிறைவு செய்திட வேண்டும். இந்த  நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளாண் கருவி கள், பவர்டில்லர், டிராக்டர், நடவு இயந்தி ரங்கள் ஆகியவற்றை, விவசாயப் பணி கள் துவங்கும் முன்னர் விவசாயி களுக்கு வழங்க வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.