தஞ்சாவூர், மே 4 - தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் பெருமகளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் தலை மையில் நடைபெற்றது. பேராவூரணி எம்.எல்.ஏ., என்.அசோக்குமார், சேதுபாவா சத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், பெருமகளூர் பேரூராட்சி பெருந்தலைவர் சுந்தரத்தமிழ் ஜெய பிரகாஷ், துணைத் தலைவர் சித்ரா சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.எம்.ராமலிங்கம் தலைமையிலான, அனைத்து துறை மருத்துவர் குழு 1700-க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்