பாபநாசம், ஏப். 9- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப நாசம் வங்காரம் பேட்டை, அருந்தவபுரம், இரும்புதலை, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண் கள் பங்கேற்றனர். இதில் சத்தான உணவு, சிறுதானியம், பழங்கள், கீரை வகைகள் குறித்தும், சுற்றுப் புறச்சூழல், சுத்தமான குடிநீர், குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.