districts

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமையுமா?

தஞ்சாவூர், அக்.12 - செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில், விளையாட்டு நகரம் அமைப் பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விளை யாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும்  சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில், அவர் களுக்கான நவீன பயிற்சி மையங்கள், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பயிற்சி அரங்கங்கள், விளையாட்டு அறிவியல் மையம், வீரர்களுக்கான விடுதிகள், பயிற்சியாளர்களுக்கான தங்குமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்காக சென்னை அருகே செங்கல்பட்டில் சுமார் 500 ஏக்கர் அள வில் விளையாட்டு நகரம் அமைப்ப தற்கான இடம் தேர்வு செய்யவும், அதில்  முதற்கட்டமாக 150 ஏக்கரில் பணிகளை  தொடங்கவும் விளையாட்டு துறை யால் திட்டமிடப்பட்டது.  ஆனால், அப்பகுதியில் சாத்தியக் கூறு இல்லை என்பதால், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ்  மருத்துவமனைக்காக தேர்வு செய்யப் பட்ட இடத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஒருங்கிணைந்த விளை யாட்டு நகரம் அமைக்க 150 முதல் 300 ஏக்கர் நிலம் தேவையாக உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சி புரம் போன்ற நகரங்களில் இருந்து விமான நிலையத்துக்கு சென்று வருவது  போன்ற சிக்கல் இதிலும் உள்ளது.   இதனால் உள்ளூர் விளையாட்டு வீரர்களும், வெளி மாநில, வெளி நாடு களில் இருந்து வருபவர்களுக்கும் சிக்கல் ஏற்படும். மேலும் செங்கல் பட்டு நகரம் விரிவடைந்து வருவ தால், இவ்வளவு பெரிய நிலப்பரப்பை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் - திருச்சி  இடையே செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு  செய்யப்பட்ட 300 ஏக்கர் இடம் காலி யாக உள்ளது. மேலும், செங்கிப்பட்டி யில் இருந்து திருச்சி விமான நிலை யத்துக்கு 45 நிமிடங்களிலும், தஞ்சாவூர்  ரயில் நிலையத்துக்கு 30 நிமிடங்களி லும், திருச்சி ரயில் நிலையத்துக்கு 45  நிமிடங்களிலும், பூதலூர் ரயில் நிலையத் துக்கு 15 நிமிடங்களிலும் சென்று வரக் கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளன.  இப்பகுதி இயற்கையான சுற்றுச் சூழல் நிறைந்து காணப்படுகிறது. மேலும், திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள் என்பதால் செங்கிப் பட்டியை பரிந்துரை செய்ய வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.