தஞ்சாவூர், ஜூலை 21- செகந்திராபாத் -இராமேஸ்வரம் (வழி சென்னை- எழும்பூர்- மயிலாடுதுறை-திரு வாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி) பண்டிகை சிறப்பு ரயில் 2022 ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 07685 செகந்திராபாத் -இராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் புதன்கிழமைகளில் இரவு 19.05 மணிக்கு, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் (09.30), திருவாரூர் (15.25), அதிராம்பட்டினம் (16.35), பட்டுக்கோட்டை (16.52), அறந்தாங்கி (17.51), காரைக்குடி (19.10) வழியாக சென்று வியாழக்கிழமை களில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ் வரத்தை சென்றடையும். 07686 இராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு ரயில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழ மைகளில் காலை 8.50 மணிக்கு இராமேஸ் வரத்தில் புறப்பட்டு காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை (13.13), அதிராம்பட்டினம் (13.29), திரு வாரூர் (15.15), சென்னை எழும்பூர் (21.50) வழியாக மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். 21 ரயில் பெட்டிகளை கொண்ட இந்த வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு வண்டிக்கான முன்பதிவு விரை வில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
இந்த சிறப்பு ரயில் பயணிகள் நலன் கருதி, பேராவூரணி ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று செல்ல, ரயில்வே நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங் கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.வி.கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.