கும்பகோணம், அக்.13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த ஆதி கும்பேஸ்வரர் கோயில் இடம் அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் கும்பகோணம் தஞ்சாவூர் மெயின் சாலையில் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ளது. 180 சதுர அடி மட்டுமே உள்ள அந்த இடத்தை பல ஆண்டு களாக ஜமால் முகமது மற்றும் துரை சாமிநாதன் ஆகி யோர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த இடத்திற்கான வாடகை பல ஆண்டுகளாக வாடகைதாரர் கோயிலுக்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வசம் இருந்த இடத்திற்கான வாடகை ரூ.2 லட்சத்து 962 பாக்கியாக செலுத்த வேண்டு மென மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணை யர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இடத்தை மீட்டு சீல் வைத்து கோயில் வசம் ஒப்படைக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் முருகவேல் முன்னிலையில், அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா இடத்தை பூட்டி சீல் வைத்தார்.