தஞ்சாவூர், ஜூன் 29- தமுஎகச முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், திரைப்பட நடிகரும், வீதி நாடகக் கலைஞருமான கருப்பு இராமு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். இதையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பட்டுக்கோட்டை கிளையின் சார்பில், பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே செவ்வாய்க்கிழமை மாலை வீரவணக்க புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தமுஎகச கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி எஸ்.கந்தசாமி, தமுஎகச நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறைந்த பூ இராமு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. புகழஞ்சலி உரையைத் தொடர்ந்து வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.