districts

மே 14-இல் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்: ஒருநபர் குழு ஆணைய செயலாளர் ஆய்வு

கும்பகோணம், மே 4 - கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3 ஆவது  திவ்ய தேசமாகும். இக்கோவிலில் சித்திரை தேரோட்டமானது மே 14 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த தேர் அலங்க ரிக்கும் போது சுமார் 110 அடி உயரமும் 46 அடி அக லமும் கொண்டதாகவும், 450 டன் எடை கொண்ட தாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.  இந்நிலையில், கடந்த வாரம் தஞ்சை அருகே  உள்ள களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலை யில் அதனை விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து உள்ளது. அதன் ஆணையராக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கும்பகோணம் சாரங்க பாணி கோவிலில் தேர் கட்டுமானப் பணிகளை யும், தேர் எந்தெந்த வீதி வழியாக செல்லும் என்றும், தேர் செல்லக்கூடிய பகுதியில் மின்சார  வயர்கள் ஏதும் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். அப்போது தேர் செல்லும் பாதையில் மின்சார  வயர்கள் அனைத்தும் பூமிக்கடியில் புதைக்கப்  பட்டுள்ளதாகவும் தேரோட்டம் நடைபெறும் போது, வெளி நபர்கள் தேரின் அருகே செல்லாத வாறு முன்னும் பின்னும் காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், கொத்த னார்கள் மட்டுமே தேரின் அருகே செல்வார்கள்  என்றும் கோவில் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.  அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் குமார் ஜெயந்த், தஞ்சை விபத்து நடந்ததை அடுத்து, அங்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பெரியளவில் தே ரோட்டம் நடைபெற உள்ளதால், ஆய்வு செய்யப் பட்டது. கோட்டாட்சியர் லதா தலைமையில் குழு  அமைத்து இதற்கான வழிகாட்டு நெறிமுறை களின்படி தேரோட்ட பணிகள் நடத்தப்படும் என்றார்.  பின்னர் கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு ஆலயங்களில் உள்ள தேர்கள் ஆய்வு செய்யப்பட்டன.