பூதலூர், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் சானூரப்பட்டி கிராமத்தில், தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சரி செய்திடக் கோரியும், சானூரப்பட்டி ஊராட்சியில் திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிப்பி டத்தை திறந்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலி யுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் புதனன்று சானூரப்பட்டி கிராம சேவை மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தேசிய நெடுஞ்சா லைத் துறை, ஒப்பந்த நிறுவனமான மதுக் கான் நிறுவன முதுநிலை பொறியாளர் விக்னேஷ், களப்பொறியாளர்கள், சானூ ரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணி கண்டன், போராட்டக்குழு தரப்பில் மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ‘‘தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோடு மற்றும் வடிகால் சரி செய்து தரப்படும். ஜனவரி 2023 சாலை புதிதாக அமைத்து தரப்படும். வடிகால் விரிவாக்கம் செய்திட வும், சாலை விரிவாக்கம் செய்திடவும் உயர் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் உறுதி அளித்தார். மேலும், சானூரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுக்கழிப்பிடம் 15 தினங்களுக் குள் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார். இதை யேற்று டிச.15 அன்று நடைபெறுவதாக இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.