districts

அரசுப் பணியாளர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம்

தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மார்ச் 8, 9 தேதிகளில் அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இப்பயிலரங்கில் ஆட்சி மொழிச் சட்டம், வரலாறு என்ற தலைப்பில், திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கோமல் தமிழமுதன், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் என்ற தலைப்பில் மேனாள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் புலவர் ப.ஆறுமுகம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் மேனாள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நீ.மேகநாதன், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் தமிழியல் ஆய்வாளர் முனைவர் இரா.அறிவழகன், மொழிப்பெயர்ப்பு,   கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில், அரசர் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர், முனைவர் பழ.பிரகதீசு, இணையத்தமிழ் என்னும் தலைப்பில், திருவரங்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  இதில், கலை பண்பாட்டுத் துறை மேளாள் இணை இயக்குநர் முனைவர் இராம.குணசேகரன், 2019 ஆம் ஆண்டு சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக தெரிவு செய்யப்பட்ட, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு கேடயம் வழங்கி உரையாற்றினார்.   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் (ம) புலத்தலைவர் முனைவர் இரா.காமராசு, 2020 ஆம் ஆண்டுக்கான அரசு அலுவலகங்களில், தமிழில் சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி கருத்துரையாற்றினார்.