தஞ்சாவூர், ஜூன் 22 - தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று கூலித் தொழிலாளியை ஏமாற்றி ரூ.5.67 லட்சம் பறித்த மர்ம நபர் குறித்து தஞ்சை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த வர் விஜயகுமார். கூலித் தொழிலாளியான இவர் ஆன்-லைனில் தொடர்ந்து 4 முறை பொருட்கள் வாங்கியுள்ளார். பின்னர் இவரது வீட்டுக்கு பொருட் கள் வாங்கிய நிறுவனத்தின் பெயரில் இருந்து தபால் வந்துள்ளது. அதில் பரிசு தொகைக்கான கூப்பன் (ஸ்கிராட்ச் கார்டு) இருந்துள்ளது. பரிசுத் தொகை வென்றால், குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு பரிசு தொகையை பெற்று கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து அந்த கார்டை விஜயகுமார் சுரண்டிப் பார்த்துள்ளார். அதில் ரூ.7.50 லட்சம் பரிசு தொகை வென்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த தொழிலாளி தபாலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, அதில் பேசிய மர்மநபர் பரிசு தொகையை பெற வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை யடுத்து அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் முதல் தவணைத் தொகையை விஜயகுமார் செலுத்தி உள்ளார். மீண்டும் விஜயகுமாரை தொடர்பு கொண்ட அந்த மர்மநபர், மேலும் பணம் செலுத்தினால் தான் பரிசுத் தொகை கிடைக்கும். காரணம் நாண யம் வடிவில் (பிட்காயின்) பரிசுத் தொகை உள்ளது என்று தெரிவிக்கவே, தனது மனைவி யின் நகை மற்றும் தனது குழந்தைகள் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து மீண்டும் பணம் செலுத்தி உள்ளார்.
பின்னர் பரிசு தொகை வழங்க தங்களை பரி சோதனை செய்ய, எங்கள் நிறுவனத்தில் இருந்து ஆட்கள் வர வேண்டியது இருக்கும் அல்லது நீங்கள் வெளிநாட்டிற்கு வர வேண்டும். அத னால் டிக்கெட்டுக்கான பணத்தை அனுப்ப வேண்டுமென மர்ம நபர் தெரிவிக்கவே, இதை உண்மை என்று நம்பிய விஜயகுமார், மீண்டும் ஒரு தொகையை அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இப்படியே விஜயகுமாரிடம் இருந்து அந்த மர்ம நபர் ரூ.5.67 லட்சத்தை மோசடியாக பெற்றுள் ளார். ஆனாலும் பரிசுத் தொகை வராததால் சந்தேகமடைந்த விஜயகுமார் அந்த மர்ம நபருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார், தஞ்சை சைபர் கிரைம் காவல் நிலை யத்தில் புகார் செய்ததன் பேரில், ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர். “வெளிநாட்டில் வேலை என கூறி ஆன்-லைனில் பல போலியான பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்டவாறு பணம் செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் உங்களது வங்கி விபரங்கள், ஏ.டி.எம் கார்டு விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். வங்கி யில் இருந்து உங்களுக்கு இது போன்ற விவ ரங்கள் கேட்கப்படுவதில்லை. அப்படி யாரேனும் கேட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதே போல் உங்களது செல்போன் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது. இதற்காக முன் பணம் கட்ட வேண்டும் எனக்கூறி குறுந்தகவல் வந்தாலும் நம்ப வேண்டாம்” என பொதுமக்களுக்கு சைபர் கிரைம் பிரிவினர் அறி வுறுத்தி உள்ளனர்.