தஞ்சாவூர், மார்ச் 29 - தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை ஏ.எல்.ரகீம் நகரை சேர்ந்தவர் நைனார்முகம்மது (46). இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வா ளர் ஞானசுமதியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “எங்கள் பகுதியை சேர்ந்த நில தரகர் அருணா சலம் (50) பாபநாசம் அருகே உள்ள காந்திநகர் சோழ மங்கலம் 2 ஆம் சேத்தி கிராமத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறினார். அதற்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்றார். இதனை உண்மை என்று நம்பிய நான் ரூ.10 லட்சம் கொடுத்தேன். இதற் கான அக்ரீமென்ட் பத்திரம் கடந்த 26.1.2020இல் போடப் பட்டது. இதேபோல் எனது மருமக னான முகம்மது என்பவரிட மும் நிலம் வாங்கி தருவ தாக கூறி ரூ.12 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் இதுவரை அவர் கூறியபடி நிலம் எதுவும் வாங்கி தரவில்லை. இதுகுறித்து பலமுறை அரு ணாசலத்திடம் கேட்டும் பய னில்லை. அவரிடமிருந்து நானும், எனது மருமகனும் கொடுத்த ரூ.22 லட்சத்தை வாங்கி தர வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அருணா சலத்தை கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.